சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் நாளை (15) காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் மற்றும் உக்ரைன் பிரச்னை குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவு, ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை மேற்கொள்வார்கள் என்றார்.