“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டம்!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சமுர்த்தி திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நேற்று முன்தினம் (06) மீரிகமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சுய தொழில் ஒன்றை செய்வதற்காக தையல் இயந்திரங்கள், இலத்திரனியல் தராசுகள் உட்பட பல உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, மீரிகமை பிரதேச சபை தவிசாளர் சனத் நந்தசிறி உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள், மீரிகமை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(ரிஹ்மி ஹக்கீம்)

 

Popular

More like this
Related

அபிவிருத்திக்கு பயன்படவுள்ள முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்.

முன்னாள் அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்களாகப் பயன்படுத்திய பங்களாக்கள் மற்றும் தொடர்புடைய வளாகங்கள்...

விளையாட்டுத் தொகுதிகளுக்கு புதிய முகாமைத்துவ சபை

விளையாட்டு கலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கில் (2025-2027), விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்திற்குச் சொந்தமான...

தற்காலிக சாரதி உரிமம் : கட்டணத்தில் மாற்றம்: அமைச்சரவை அங்கீகாரம்

2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க மோட்டார் வாகன (சாரதி...

அனர்த்த நிவாரணப்பணியில் தொடரும் ‘Newsnow’இன் பணிகள்: கரைத்தீவு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் தாக்கம்...