நள்ளிரவு முதல் லாப்ஃஸ் எரிவாயு சிலிண்டர் சந்தைக்கு!

Date:

நள்ளிரவு முதல் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.உரிய தரத்துடனான சமையல் எரிவாயு கொள்கலன்களே சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளிவ்.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தர நிர்ணய நிறுவனத்தின் பரிந்துரைக்கு அமைய புதிய செறிமானம் காட்சிப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 30 சதவீத ப்ரோப்பென் செறிமானம் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.உரிய செறிமானம் அடங்கிய சமையல் எரிவாயு கொள்கலன்களை சந்தைக்கு விநியோகிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, உரிய தரத்துடனான சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...