நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று உறுதியான மொத்தம் நான்கு பேர் இதுவரையில்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.எதிர்காலத்தில் Omicron வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என டாக்டர் ஜீவந்தர மேலும் எச்சரித்தார்.பூஸ்டர் கோவிட்-19 தடுப்பூசி அளவைப் பெறுமாறு பொதுமக்களை அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஒரு பெண்ணிடம் ஒமிக்ரோன் இலங்கையில் முதலில் கண்டறியப்பட்டது.வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...