பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அம்பாறையில் நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு!

Date:

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மாவட்ட நிகழ்வு நேற்று முன்தினம் [30] அம்பாறை மொன்டி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இம்முறை ‘Orange the World – பெண்களுக்கு எதிரான வன்முறையை இப்போதே ஒழிக்கவும்’ எனும் தொனிப்பொருளில்,

கப்சோ நிறுவனத்தின் பணிப்பாளர் காமில் இம்டாட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரனாகே கலந்து சிறப்பித்தார்.

மேலும் அதிதிகள் வரிசையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெகதீசன், வைத்தியர் சமீர, மாவட்ட சிறுவர் பெண்கள் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் திருமதி கமகே, மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சுரேகா எதிரிசிங்க, ஆசிய நிலையத்தின் பிரதிநிதி ஜவாஹிர், அம்பாறை பிரிவு ஒன்றின் பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத், அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பண்டார ஆகியோர் கலந்து கொண்டனர் . இந் நிகழ்வில் மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமான முன்மொழிவுகளை திணைக்களங்களின் பிரதிநிதிகள் முன் வைத்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வை சிறப்பிக்க அம்பாறை மாவட்டத்தில் பணியாற்றும் சகல பொலிஸ் நிலையங்களினதும் சிறுவர், மகளிர் பிரிவு பொறுப்பதிகாரிகள், சகல பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்கள், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கப்சோ நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

(எம்.பி.எம்.றின்ஸான்)

 

Popular

More like this
Related

விவாகரத்து மற்றும் முஸ்லிம் திருமணச் சட்டம் தொடர்பான இரண்டு தனிநபர் மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கையின் தனிநபர் சட்டங்களை நவீனமயமாக்கும் நோக்கில், ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ அனுஷ்டிப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு...

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...