மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் சங்கம் மனு தாக்கல்!

Date:

வங்கி கணக்குகளினூடாக நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை இலங்கை ரூபாவாக மாற்றுவதை கட்டாயமாக்கி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் (BASL) இன்று (14) மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகளின் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் குறித்த சங்கத்தின் பிரதி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மத்தேகொட ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் மனுவின் பிரதிவாதிகளாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், மத்திய வங்கியின் நாணய சபை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வங்கி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...