நாட்டின் சில பகுதிகளில் இன்று (22) மாலை மின் விநியோகம் தடைப்படும் என மின் சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (22) மாலை 6..30 – 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த மின் விநியோகத் தடை 30-45 நிமிடங்கள் வரை நீடிக்கும் என மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.மேலும் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின் சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.