முன்னாள் நீதிவான் திலின கமகே விடுதலை!

Date:

சட்டவிரோதமாக யானைக் குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதிவான் திலின கமகே நிரபராதி யாக கருதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கமகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் நீதவான் திலின கமகே, சந்திரரத்ன பண்டார யாதவர மற்றும் வனவிலங்கு அதிகாரிகளான உபாலி பத்மசிறி மற்றும் பிரியங்கா சஞ்சீவனி ஆகிய நான்கு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

உரிமம் இல்லாமல் யானைக் குட்டியை வைத்திருந்தது, போலி ஆவணங்களை டெண்டர் செய்ய சதி செய்தது, போலி ஆவணம் தயாரித்து சம்பந்தப்பட்ட யானைக் குட்டியை பதிவு செய்தது உள்ளிட்ட 25 பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னாள் நீதவான் திலின கமகே 2016 ஆம் ஆண்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...