மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி கராச்சியில் இன்று (14) இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முஹம்மத் ரிஸ்வான் 38(30), கய்தர் அலி 31(34), இப்திகார் அஹ்மத் 32(19),சதாப் கான் 28(12) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்கள்.
மே.தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஸ்மித் 2(29) விக்கெட்டுகளையும், அகேல் ஹொசைன் , தோமஸ் , வொல்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
173 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய மே.தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.
மே.தீவுகள் அணியின் துடுப்பாட்டத்தில் பிரண்டன் கிங் 67( 43) , செபர்ட் 35(19) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷஹீன் அப்ரிடி 3(26), முஹம்மத் நவாஸ் 2(36), ஹரிஸ் ரொவ்ப் 2 மற்றும் வஸீம் ஜார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
போட்டியின் நாயகனாக சதாப் கான் தெரிவானார்.
பாகிஸ்தான் அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.மூன்றாவதும் இறுதியுமான ஆட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (16) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.