லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபத்தாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பள்ளிக்கு பரவியது. அந்த பள்ளியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகமான ஷெஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/12/10/explosion-south-lebanon-palestinian-camp

Popular

More like this
Related

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...