வறுமையில் வாடும் யெமன் மக்களுக்கு போதுமான உதவி வழங்க நிதி இல்லை – ஐ.நா சபை!

Date:

உள்நாட்டு போர் காரணமாக கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் யெமன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்க போதுமான நிதி இல்லை என ஐ.நா.தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஏமன் மக்களுக்கு உணவு வழங்கிட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், 2022 ஆம் ஆண்டு முழுவதும்  இதற்காக சுமார் 14 ஆயிரத்து 800 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் WFP என அழைக்கபடும் உணவு உதவி திட்டம் தெரிவித்துள்ளது.

யெமன் மக்களின் பசியை போக்க போதுமான நிதி இல்லாததால் வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 80 லட்சம் மக்களுக்கு குறைந்த அளவிலான உணவு வழங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.,தெரிவித்துள்ளது.

யெமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியா அரசின் துணையுடன் செயல்படும் யெமன் அரசுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக போர் நடந்து வருவது குறிப்படத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.bbc.co.uk/news/world-middle-east-59754152&ved=2ahUKEwiL49Gv9Pn0AhU2yzgGHbw3CCAQ0PADKAB6BAgsEAE&usg=AOvVaw0qjgdaGLRR46hKRUGqqw6-

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...