வறுமையில் வாடும் யெமன் மக்களுக்கு போதுமான உதவி வழங்க நிதி இல்லை – ஐ.நா சபை!

Date:

உள்நாட்டு போர் காரணமாக கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் யெமன் நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்க போதுமான நிதி இல்லை என ஐ.நா.தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் வரை ஏமன் மக்களுக்கு உணவு வழங்கிட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் தேவை எனவும், 2022 ஆம் ஆண்டு முழுவதும்  இதற்காக சுமார் 14 ஆயிரத்து 800 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகளின் WFP என அழைக்கபடும் உணவு உதவி திட்டம் தெரிவித்துள்ளது.

யெமன் மக்களின் பசியை போக்க போதுமான நிதி இல்லாததால் வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 80 லட்சம் மக்களுக்கு குறைந்த அளவிலான உணவு வழங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.,தெரிவித்துள்ளது.

யெமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியா அரசின் துணையுடன் செயல்படும் யெமன் அரசுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக போர் நடந்து வருவது குறிப்படத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.bbc.co.uk/news/world-middle-east-59754152&ved=2ahUKEwiL49Gv9Pn0AhU2yzgGHbw3CCAQ0PADKAB6BAgsEAE&usg=AOvVaw0qjgdaGLRR46hKRUGqqw6-

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...