வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை!

Date:

வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய நிலைவை கொடுப்பனவை வழங்கி மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ,தாபன சட்ட விதிகளின் படி அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் , அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான முஹம்மத் ஷாஃபி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.எனினும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதில் முன்மாதிரியாகத் திகழும் புத்தளம்.

நேற்று நடைபெற்ற அருட்தந்தை திலங்க அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு! புத்தளம் மாவட்ட சர்வ...

இரண்டு அமெரிக்கப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய ஈரான்!

ஈரான் மற்றும் வளைகுடா வான் பரப்பில் இரண்டு அமெரிக்கப் போர் விமானங்கள்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர்...

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...