வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை!

Date:

வைத்தியர் ஷாஃபியை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை செய்ததாக போலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீனுக்கு வழங்க வேண்டிய நிலைவை கொடுப்பனவை வழங்கி மீண்டும் பணியில் அமர்த்துமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.எச் முணசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் ,தாபன சட்ட விதிகளின் படி அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் , அவர் கட்டாய விடுமுறையில் இருந்த காலப்பகுதிக்கான கொடுப்பனவை மீள செலுத்துமாறு கோரியுள்ளார்.

கருத்தடை சத்திர சிகிச்சை விவகாரத்தில் கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளான முஹம்மத் ஷாஃபி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.எனினும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...