ஸம் ஸம் நிறுவனத்தின் அனுசரணையில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம்!

Date:

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை மேம்மடுத்துவதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

ELAP (Emergency Learning Assistance programme) எனும் இத் திட்டத்தின் முதலாவது கட்டமாக 21 நிலையங்களில் 1050 மாணவர்களுக்குபரிட்சையில் சித்தியடைய விஷேட பயிற்சி வழங்கும் இந்த திட்டத்திற்கு ஸம் ஸம் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை மத்திய மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கைச்சாத்திடப்பட்டது. இந் நிகழ்வில் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. அமரசிறி பியதாச,மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவர் முப்தி.யூசுப் ஹனிபா மற்றும் ஸம் ஸம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸம் ஸம் நிறுவனமானது இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கல்வி, சமூக நல்லிணக்கம், சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய பகுதிகளில் “மதங்களைக் கடந்த மனிதநேயம்” என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் பதிவு செய்யப்பட்ட இலங்கை சமூக சேவைகள் அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...