இந்திய ஒரு நாள் அணியின் தலைவராக ரோஹித் சர்மா நியமனம்!

Date:

இந்திய ஒருநாள் அணியின் தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இந்திய ஒருநாள் அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, ஜனவரி மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய ஒரு நாள் அணிக்கு ரோஹித் சர்மா தலைவராக பொறுப்பேற்பார் என பிசிசிஐ இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் அஜிங்கியா ரஹானேவுக்குப் பதிலாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு வரும் விராட் கோஹ்லி தலைமையில் 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி ஒரு நாள் உலகக் கிண்ணங்களை இந்திய அணி கைப்பற்றத் தவறியுள்ளது.இதனால் கடும் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோஹ்லி, கடந்த மாதம் நிறைவுக்கு வந்த T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு T20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதனையடுத்து இந்திய T20 அணியின் புதிய தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் வகையிலும், வலுவான இந்திய அணியை உருவாக்கும் முடிவிலும் தற்போது ஒரு நாள் தலைவர் பதவியிலிருந்தும் விராட் கோஹ்லி நீக்கப்பட்டுள்ளார், இதனால் அவருக்குப் பதில் உப தலைவராக இருந்த ரோஹித் சர்மா இந்திய ஒருநாள் அணியின் புதிய தவைராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...