ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபரொருவர் கைது!

Date:

ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியா நபரொருவர் பிரான்ஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

காலித் ஏத் அலோதைபி என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .கஷோகியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட 26 பேரில் இவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா அரசாங்கத்தை விமர்சித்து வந்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகி அக்டோபர் 2018 ஆம் ஆண்டு துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவூதி அரேபியா தூதரகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...

அனுராதபுரம் மற்றும் குருநாகலில் புதிய வீடமைப்புத் திட்டம் ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு!

‘தித்வா’ சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு பதிலாக, ‘Rebuilding Sri Lanka’...

மேலும் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல்...

வலுவடையும் தாழமுக்கம்: பல பகுதிகளில் மழை

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...