நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று உறுதியான மொத்தம் நான்கு பேர் இதுவரையில்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.எதிர்காலத்தில் Omicron வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என டாக்டர் ஜீவந்தர மேலும் எச்சரித்தார்.பூஸ்டர் கோவிட்-19 தடுப்பூசி அளவைப் பெறுமாறு பொதுமக்களை அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஒரு பெண்ணிடம் ஒமிக்ரோன் இலங்கையில் முதலில் கண்டறியப்பட்டது.வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...