பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது

Date:

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி. கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது.
பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்ட 16 நாள் வேலைத்திட்டம் இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் நிறைவு பெற்றது.
இறுதி நாளான இன்றைய தினம் பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம், பிரதேச செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியுாகத்தர், உதவி திட்ட உத்தியோகத்தர், பெண்கள் வாழ்வுரிமை சிறுகுழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கண்டாவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிககாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அனைத்து இன, மத, சமய நல்லிணக்கத்தின் அடையாளமாக சமாதான வெள்ளை புறா பறக்க விடப்பட்டதுடன், பலூன்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நிருபர்
சப்த சங்கரி

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...