லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமில் வெடிப்பு சம்பவம் ; இதுவரையில் 12 பேர் பலி!

Date:

லெபனான் நாட்டில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த ஆயுத கிடங்கு வெடித்து சிதறியதால் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் உள்ள ஒரு சில பாலஸ்தீன முகாம்கள், ஹமாஸ் அல்லது ஃபத்தாஹ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ளன.

துறைமுக நகரான டயரில் உள்ள அகதிகள் முகாமில், டீசல் டேங்கர் லாரி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த பள்ளிக்கு பரவியது. அந்த பள்ளியை ஹமாஸ் அமைப்பினர் ஆயுத கிடங்காக பயன்படுத்தி வந்ததால், அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதுவரையில் 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொவிட் தொற்று நோயை கட்டுப்படுத்த சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒக்சிஜன் சிலிண்டர்கள் பற்றியதால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக பலஸ்தீன ஊடகமான ஷெஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2021/12/10/explosion-south-lebanon-palestinian-camp

Popular

More like this
Related

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...

குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை கையளிப்பு.

இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி...

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிமித்தம் கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட...