ஸ்பெயினின் அர்கா ஆற்றின் கரை உடைந்ததில் பாரிய வெள்ளம்!

Date:

தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பாரா புயலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஸ்பெயின் நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன.கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/markets/commodities/severe-flooding-kills-one-storm-barra-drenches-northern-spain-2021-12-10/&ved=2ahUKEwjJnqvd8tv0AhUagtgFHeLuDlYQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0HPYi-bQLr3OyK07eg_qsS

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...