ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவை இட்டதாக கூறி இந்திய இளைஞன் ஒருவர் கைது!

Date:

இந்திய குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் தொடர்பாக தேவையற்ற யூகங்களையும் , கருத்துக்களையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.அவ்வாறு சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந் நிலையில் இந்திய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷிபிந்த் என்ற 24 வயது இளைஞன் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக சைபர் கிரைம் பொலிசாரால் கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...