ஆப்கானில் பாரிய நிலநடுக்கம்; இதுவரையில் 26 பேர் பலி!

Date:

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு நில நடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட ஈடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானின் மேற்கு மாகாணமான பட்கிஸ்சில் மதியம் 2 மணி மற்றும் மாலை 4 மணிக்குள் அடுத்தடுத்து நில அதிர்வு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் அதிகபட்சமாக 5.3 ஆக பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வீடுகளின் கூரைகள் மற்றும் சுவர்கள் சரிந்து விழுந்து தரைமட்டமாகின. துர்க்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் அலறி அடித்தபடி ஓடினார்கள்.இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

https://www.aljazeera.com/news/2022/1/17/earthquake-hits-western-afghanistan-killing-more-than-20

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...