உத்தரா தேவி அதிவேக புகையிரதம்  காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!

Date:

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் வனவாசலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இன்று ( 01) மதியம் 12.45 மணியளவில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.கார் தீப்பிடித்து எரிந்ததால் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதோடு. தீயினால் புகையிரத இயந்திரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வனவாசல, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தால் புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...