“ஏரோ மெக்சிகோ” ஊழியர்கள் ஏராளமானோருக்கு கொவிட் தொற்று ; 200 விமானங்களின் சேவை ரத்து!

Date:

மெக்சிகோவில் கொவிட் தொற்று அதிகரிப்பால்,சுமார் 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனால் தொடர்ந்து 4 நாட்களாக விமான நிலையத்திலேயே பயணிகள் தவித்து வருகின்றனர்.

“ஏரோ மெக்சிகோ விமான நிறுவனத்தின் ஊழியர்களில் ஏராளமானோருக்கு தொற்று உறுதியானதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதன் பெரும்பாலான விமானங்களின் சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், விமான டிக்கெட் எடுத்தவர்கள் செய்வதறியாது, மெக்சிகோ சிட்டி விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். உரிய நேரத்தில் செல்லாவிட்டால் தனது அமெரிக்க வேலை பறிபோகும், என பெண் ஒருவர் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.மேலும், விமான நிலையத்தில் தங்களுக்கு உணவுக்கு கூட சரியான ஏற்பாடு செய்யப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/world/americas/aeromexico-halts-flights-covid-domino-effect-hits-crews-union-2022-01-07/&ved=2ahUKEwiOjquYxqf1AhXyjOYKHeT1A5kQFnoECAUQAQ&usg=AOvVaw2-9zbvy9k5ldVghpWReMWH

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...