கானாவில் வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லொறி விபத்தில் சிக்கியது; இதுவரையில் 17 பேர் பலி!

Date:

ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.இதில் லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச்சிதறி பயங்கர வெடி விபத்து நேரிட்டதன் காரணமாக அக்கம்பக்கம் இருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.பெரிய கட்டடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம்: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.aljazeera.com/amp/news/2022/1/20/ghana-police-report-huge-explosion-near-mines-in-west&ved=2ahUKEwiNk7zxnsL1AhXk8XMBHQkgB3IQFnoECCQQAQ&usg=AOvVaw0t8EGow_6QH8ch5eGoRlRf

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...