சவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞர் ஷைக். ஷாலிஹ் அல்-லுஹைதான் மறைவு!

Date:

ரியாத் – சவூதி அரேபியாவின் மூத்த, மற்றும் மதிப்புமிக்க மார்க்க அறிஞரான கலாநிதி ஷைக் ஷாலிஹ் அல்-லுஹைதான் நேற்று புதன்கிழமை (05) காலமானார்.

நீண்ட காலமாக நோயுற்றிருந்த அவரது மரணச் செய்தியை நேற்று புதன்கிழமை அதிகாலை குடும்பத்தினர் ட்விட்டரில் உறுதிப்படுத்தினர்.

90 வயதான ஷைக் அல்-லுஹைதான் அல்-கசீம் பிராந்தியத்திலுள்ள புகைரியா நகரில் பிறந்தார்.மேலும் முஸ்லீம் உலக லீக்கின் உறுப்பினர், மூத்த அறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர் உட்பட பல பதவிகளை வகித்தார். மற்றும் உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.

ட்விட்டரில், அவரது பெயர் ஹேஷ்டேக் செய்யப் பட்டு, அவருக்கான பிரார்த்தனைகளும் அனுதாபங்களும் குவிந்தன.

கலாநிதி. அல்-லுஹைதான் மக்காவின் பெரிய பள்ளிவாசலிருந்து பிரசங்கங்களையும் வழங்கி வந்ததோடு ஒரு இஸ்லாமிய பத்திரிகையின் வெளியீட்டாளராகவும் இருந்தார். மறைந்த அறிஞரின் ஜனாஸா ரியாத்திலுள்ள அல் ராஜ்ஹி பள்ளிவாசலில் பல்லாயிரம் பேர் முன்னிலையில் தொழுகை நடத்தப் பட்டு,நல்லடக்கம் செய்யப்பட்டது.அன்னாரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...