சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன நியமனம்!

Date:

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின்(ITN) புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஊடகவியலாளருமான நிரோஷன் பிரேமரத்ன இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.சுயாதீன தொலைக்காட்சியில் தனது ஊடக பயணத்தை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன சிறந்த செய்தி வாசிப்பாளராகவும்,செய்தி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளதுடன், சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதையும் வென்றுள்ளார்.சுயாதீன தொலைக்காட்சி ஊடகவலையமைப்பின் வரலாற்றில் சுயாதீன தொலைக்காட்சியில் பணிபுரிந்த ஒருவர் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன்,இவர் மிக இள வயது தலைவராகும்.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் கீழ் வசந்தம் வானொலி,வசந்தம் தொலைக்காட்சி,லக்ஹன்ட வானொலி என்பன செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.சுயாதீன தொலைக்காட்சி ஊடகவலையமைப்பின் புதிய தலைவருக்கு வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...