நாட்டின் ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு!

Date:

கடந்த 2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக பொருள்கள் ஏற்றுமதியில் ஈட்டப்படும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எல்லையை தாண்டி 2021 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கை விட அதிகமாகும் எனவும் 2020 உடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாதாந்திர வர்த்தக ஏற்றுமதி வருமானம் பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஊடாக 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்தமை குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விசேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...