சீமெந்து பொதியின் விலையை இன்று (01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை நூறு ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனினும். தற்போது இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலையானது, உள்ளுர் சீமெந்து பொதியின் விலையை விடவும் 100 ரூபா அதிகமாகும்.அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து பொதியின் விலை 1.475 ரூபாவாக உள்ளது.
ஒரு மாத காலத்திற்குள் சீமெந்தின் விலை 35 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீமெந்துக்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் எதிர்நோக்கும் டொலர் நெருக்கடியே இதற்கு காரணமாகும்.