மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் கிண்ணம் ரஃபேல் நடால் வசம்!

Date:

மெல்போா்ன் சம்மா் செட் ஆடவா் டென்னிஸ் போட்டியின் ஒற்றையா் பிரிவில் ஸ்பெயின் வீரா் ரஃபேல் நடால் கிண்ணத்தை வென்றுள்ளார்.உலகின் 6 ஆம் நிலை வீரராக இருக்கும் நடால், இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் மேக்ஸிம் கிரெஸியை 7 – 6 (8/6), 6 – 3 என்ற செட்களில் வீழ்த்தியுள்ளார். இது ஏடிபி டூா் போட்டிகளில் நடால் வெல்லும் 89 ஆவது பட்டமாகும்.

காயம் மற்றும் கொவிட் தொற்று  போன்றவை காரணமாக கடந்த ஆண்டு இறுதிக் கட்டத்தில் விளையாடாமல் இருந்தாா் . தற்போது ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான அவுஸ்திரேலிய ஓபன் எதிா்வரும் நிலையில், அதற்காக தன்னை தயாா்படுத்திக் கொள்ளும் வகையில் அவா் இப்போட்டியில் களமிறங்கியுள்ளார்.

ஓபன் எராவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று நடால், ஸ்விட்சா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் சமனிலையில் உள்ளனா். எனவே, அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்று 21 ஆவது கிராண்ட்ஸ்லாமை எட்டி சாதனை படைக்கும் முனைப்பில் நடால் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...