மேல் மாகாணத்திலுள்ள அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்!

Date:

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (26) காலை 7 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க எந்த தரப்பினரும் தலையிடாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அதன் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

சம்பள வேறுபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்கு நிர்வாக ரீதியிலான தீர்வுகள் வழங்கப்படாமை குறித்து கவனம் செலுத்தி மாகாண மட்டத்தில் எட்டு வேலைநிறுத்தங்களை நடத்தியுள்ளோம்.

இந்த அடையாள நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சும் அரசாங்கமும் தலையிட்டு நியாயமான தீர்வுகளை வழங்கும் என்பது எமது நம்பிக்கை என அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்று அழைக்கப்படும்...

நாடளாவிய ரீதியில் 3 நாள் டெங்கு ஒழிப்பு திட்டம்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி...

‘டிரம்ப் ஒரு கோழை, தைரியம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்’: டிரம்ப்புக்கு கொலம்பியா அதிபர் சவால்!

டொனால்ட் டிரம்ப் ஒரு கோழை, துணிவிருந்தால் என்னை கைது செய்யட்டும் என...

6ஆம் தர ஆங்கிலப் பாடநூலிலிருந்து சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட...