பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி2 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் ஓடினர். தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது தெருவோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.