இன்று அதிகாலை பெருவில் பாரிய நிலநடுக்கம்!

Date:

பெருவில் இன்று (08)அதிகாலையில் திடீரென ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து சேதமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட கிழக்கு மாவட்டமான சாண்டா அனிடாவில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி2 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 12 நிமிடங்கள் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்து சாலைகளில் ஓடினர். தொலைக்காட்சி நிலையங்கள், நிலநடுக்கத்தின் போது தெருவோர மின் விளக்குகள் அணைந்தது, கடல் சீற்றம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.volcanodiscovery.com/beru-earthquakes.html&ved=2ahUKEwiAwoW-sKH1AhWk63MBHWL6BCoQFnoECAcQAQ&usg=AOvVaw1_EhH-OcV4jcIeGaSUN9ix

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...