இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் அபார வெற்றி

Date:

சகுன நிதர்ஷன லியனகேவின் அபார துடுப்பாட்டம் மற்றும் அணித்தலைவர் துனித் வெல்லாலகேவின் மாயாஜால சுழல் என்பவற்றின் மூலம் ஐசிசி இன் 19 வயதின்கீழ் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் இலங்கை 19 வயதின்கீழ் அணி 40 ஓட்டங்களால் அபார வெற்றயீட்டியது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 14ஆவது தடவையாக நடத்தப்படும் 19 வயதின்கீழ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நேற்று (14) மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகியது.

இதில் முதல் போட்டியில் வரவேற்பு நாடான மேற்கிந்தியத் தீவுகள் 19 வயதின் கீழ் அணியை அவுஸ்திரேலிய அணி 19 வயதின்கீழ் அணி எதிர்கொள்ள, இரண்டாவது போட்டியில் ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியை இலங்கை 19 வயதின்கீழ் அணி எதிர்கொண்டது.

இந்த நிலையில், இலங்கை – ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணிகள் மோதிய போட்டி கயானாவின் எவரெஸ்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தனது தரப்பிற்காகப் பெற்றார்.

ஸ்கொட்லாந்து 19 வயதின்கீழ் அணியால் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெல்லாலகே தனது மாயஜால சுழல் மூலம் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

அதேபோல, ஷெவோன் டேனியல் 2 விக்கெட்டுகளையும், மதீஷ பத்திரன மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் வீpழ்த்தினர்.

இதன்படி, 40 ஓட்டங்களால் வெற்றயீட்டிய இலங்கை 19 வயதின்கீழ் அணி, இம்முறை இளையோர் உலகக் கிண்ணத்தில் 2 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தைப் பெற்றது.

நன்றி த பபரே

Popular

More like this
Related

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...

இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை: இலங்கை பிரஜை மீட்பு.

மனிதாபிமான அடிப்படையிலும், கடலில் ஆபத்தில் இருப்பவர்களைக் காக்கும் கடமையுணர்வோடும் பாகிஸ்தான் கடற்படை...