உத்தரா தேவி அதிவேக புகையிரதம்  காருடன் மோதியது; ஒருவர் உயிரிழப்பு!

Date:

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அதிவேக புகையிரதம் வனவாசலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இன்று ( 01) மதியம் 12.45 மணியளவில் காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.கார் தீப்பிடித்து எரிந்ததால் கார் பலத்த சேதம் அடைந்துள்ளதோடு. தீயினால் புகையிரத இயந்திரங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

வனவாசல, திப்பிட்டிகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவத்தால் புகையிரதத்தில் பயணம் செய்த பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.

Popular

More like this
Related

பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அண்மைய...

உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் செய்திகளை நம்ப வேண்டாம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...