உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொவிட் தொற்று உறுதி -உலக சுகாதார அமைப்பு!

Date:

உலகம் முழுவதும் கடந்த வாரம் 1.8 கோடி பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சா்வதேச அளவில் கடந்த வாரம் கூடுதலாக 1.8 பேருக்கு கொவிட் உறுதி செய்யப்பட்டுள்ளது.அதற்கு முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட கொவிட் பாதிப்பு எண்ணிக்கையை விட இது 20 சதவீதம் அதிகமாகும். ஆப்பிரிக்காவைத் தவிர மற்ற அனைத்து பிராந்தியங்களிலும் கடந்த வாரம் கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.

அதே நேரம், உலக அளவில் கொவிட்டினால் பலியானவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைப் போலவே கடந்த வாரமும் சுமாா் 45 ஆயிரமாக இருந்தது என்று குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...