ஆப்பிரிக்க நாடான கானாவின் அபியேட் பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்தில் ஏராளமான கட்டடங்கள் தகர்ந்து விழுந்தன.இதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு 60 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமான அல்ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.
அங்கிருந்த தங்கச் சுரங்கத்தில் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இருசக்கர வாகனத்துடன் மோதியது.இதில் லொறியில் இருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச்சிதறி பயங்கர வெடி விபத்து நேரிட்டதன் காரணமாக அக்கம்பக்கம் இருந்த கானாவின் உறுதியில்லாத நூற்றுக்கணக்கான வீடுகள் தகர்ந்து விழுந்தன.பெரிய கட்டடங்கள், சுவர்கள் இடிந்துவிழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.