சக வாழ்வை பலப்படுத்த உதவும் “பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்” நூல் வெளியீட்டு விழா!

Date:

வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் (ஸலாமி) எழுதிய ‘பல்லின சமூகத்தில் இன நல்லிணக்கம்’ எனும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (08) காலை 10 மணிக்கு வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வரையறுக்கப்பட்ட மக்கள் சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கலீல் ரஹ்மான் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.நவநீதன் மற்றும் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலாசிரியரின் கன்னி வெளியீடான இந் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு, கிழக்கு மாகாண ஊழியர் சேமலாப நிதியத்தின் மாகாணப்பணிப்பாளர் ஏ.தாஹிர், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஏ.எல்.அமீன், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப்பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், வாழைச்சேனை பொலிஸ் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...