நாளை மறுதினம் கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்!

Date:

கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் (08) 16 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.அவசர திருத்த பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இந்த நீர் விநியோக தடை அமுலில் இருக்கும் என குறித்த சபை அறிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு தெஹிவளை, கல்கிசை ,கோட்டை மற்றும் மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது .இது தவிர கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணி நேரம் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...