பலம் வாய்ந்த இரு வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் இலங்கை அணி!

Date:

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் அவிஷ்கா பெர்னாண்டோவுக்கு, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் வனிந்து ஹசரங்கவும் காயமடைந்துள்ளதால் பலம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பங்குபற்ற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானக ஜனவரி 16 ஆம் திகதி பல்லேகலையில் தொடங்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அணியை வழிநடத்தவுள்ளார்.அவிஷ்க பெர்னாண்டோ அணியில் இல்லாததால், குசல் மெண்டிஸ் திரும்ப அழைக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் மீதான தடையை நீக்கியதை அடுத்து குசல் மெண்டிஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...