பவள விழா காணும் தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம்- அரனாயக (1947-2022)!

Date:

சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை மாவட்டத்தில் அரனாயக பிரதேச சபைக்கு உட்பட்ட தல்கஸ்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம் தனது 75 ஆம் அகவையில் காலடி வைத்து பவள விழாவை இன்று (31) கொண்டாடியது.

பாடசாலையின் அதிபர் C.M.S. மஹ்பூப் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் இவ் விழாவில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் மதிப்பிற்குரிய கனக ஹேரத் அவர்களும் மேலும் மாவனெல்லை கல்விப் பணிமனையின் அதிகாரிகளும் , பிரதேசத்தின் ஏனைய பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இவ் வைபவம் இன்று (31) ஆம் திகதி சுகாதார வழிமுறைகளை தழுவியதாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந் நிகழ்வு பாடசாலை அதிபரின் தலைமையில் பிரதி அதிபர்கள் ,உப அதிபர்கள்,ஆசிரியர்கள் ,பாடசாலையின் அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள், ஊர் மக்கள், பாடசாலை மாணவர்கள் அனைவரினதும் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

1947.02.03 திகதி 70 மாணவர்களுடன் ஒரு ஓலைக் குடிசையில் ஆரம்பிக்கப்பட்ட தல்கஸ்பிட்டி மு.மா.வி இன்று பல வளர்ச்சிப்படிகளை கண்டு வலய மட்டத்திலும் ,தேசிய மட்டத்திலும் பல சாதனை மாணவர்களை உருவாக்கி தலை நிமிர்ந்து நிற்கின்றது.

பாடசாலையின் அதிபர் C.M.S மஹ்பூப் ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகையில்,

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பவள விழா வைபவம் குறிப்பிட்ட எல்லைக்குள் நடத்தப்பட்டாலும் பவள விழாவை அடியொட்டிய செயற்திட்டங்கள் இவ் வருடம் முழுவதுமாக நடாத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் இப் பாடசாலையை சகல துறைகளிலும் சம்பூரணமான பாடசாலையாக மாற்றியமைப்பதில் தன்னாலான முழு முயற்சியையும் மேற்கொள்ளும் அவாவுடன் செயற்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும் பவள விழா வைபவத்தில் பாடசாலைக்கென பெற்றுக் கொள்ளப்பட்ட 328 பேர்ஷஸ் நிலம் விளையாட்டு மைதானமாக மாற்றியமைப்பதற்கான அங்குரார்ப்பணமும், தல்கஸ்பிடிய ஜும்மா மஸ்ஜித்துக்குரிய 17 பேர்ஷஸ் நிலம் பாடசாலைக்கு கையளிக்கப்பட்டதும் ,பவள விழா நினைவு தூபி திரை தூபி திரை நீக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால உறுப்பினர் ஸர்ஸம் காலிதின் ஜனாஸா கஹட்டோவிட்டவில் நல்லடக்கம்: ரவூப் ஹக்கீமும் பங்கேற்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால உறுப்பினரும் தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நீண்டகாலம் கடமையாற்றியவரும்...

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற நிலை

நாளை, (03) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...