கொவிட் தடுப்பூசியின் 2 ஆவது தடுப்பூசியை பெற்று 3 மாதங்கள் கடந்திருந்தால் விரைவாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார பிரிவு பொது மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கு தேவையான பைசர் மருந்து தற்பொழுது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வருகை தரும் பொது மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)