பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட ஆய்வுகூடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரினால் திறந்து வைப்பு!

Date:

பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் ஆய்வுகூடம் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் பிரகாரம் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதும் அல்லது திறப்பதும் என்பது முற்றிலும் அரசியல் இலாபத்திற்காகவே என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும்,இவ் நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைப் பெற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

பல்வேறு கருத்தியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உரையாற்றும் போது;

“இன்று நான் இந்த வாய்ப்பை சர்வ கட்சிகளின் மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதையும் புகழும் மூங்கில் போன்றது என தலைமை தேரர் ஒருவர் கூறிய வதனம் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.கடமைகளை சரிவர நிறைவேற்றுவது மிக முக்கியமான பணியாகும். இஸ்லாத்தில் குறிப்பிடுவது போன்று இறைவனுக்கு மிக நெருங்கிய மனிதர் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியவர் என்பதாகும்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்ரஸா மாணவன் மரணம்: குழந்தைகள் பாதுகாப்பு குறித்து எழும் தீவிர கேள்விகள்

வெலிமடை மதரஸா மாணவன் ஸஹ்தி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக நாடு...

காத்தான்குடியில் ஈச்ச மரமும் கத்தாரில் அரச மரமும்…!

- சஜீர் முஹைதீன் இது வேற எங்கயும் இல்ல கட்டார்தான் இது. ஒரு...

பாடசாலை நேர நீடிப்பு குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் விளக்கம்!

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பாடசாலை நேரத்தைப் பிற்பகல் 2 மணி...

காசாவுக்கான ட்ரம்பின் திட்டத்திற்கு ஐ.நா. ஆதரவு: ஹமாஸ் நிபந்தனைகள் நிராகரிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்திற்கு ஐ.நா. ஒப்புதல்...