பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் புனரமைக்கப்பட்ட ஆய்வுகூடம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரினால் திறந்து வைப்பு!

Date:

பேருவளை அல் பாஸியத்துல் நஸ்ரியா முஸ்லிம் ஆண்கள் கல்லூரியின் ஆய்வுகூடம் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் பிரகாரம் நான்கு இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக கடந்த 25 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிப்பதும் அல்லது திறப்பதும் என்பது முற்றிலும் அரசியல் இலாபத்திற்காகவே என்ற பொதுவான கருத்து மக்கள் மத்தியில் இருக்கின்ற போதிலும்,இவ் நிகழ்ச்சித் திட்டம் முற்றிலும் மாறுபட்ட வடிவத்தைப் பெற்றிருந்தது சிறப்பம்சமாகும்.

பல்வேறு கருத்தியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டமையே இதற்கு பிரதான காரணமாகும்.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் உரையாற்றும் போது;

“இன்று நான் இந்த வாய்ப்பை சர்வ கட்சிகளின் மாநாடாகவே பார்க்கிறேன். அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதையும் புகழும் மூங்கில் போன்றது என தலைமை தேரர் ஒருவர் கூறிய வதனம் தற்போது எனக்கு நினைவுக்கு வருகிறது.கடமைகளை சரிவர நிறைவேற்றுவது மிக முக்கியமான பணியாகும். இஸ்லாத்தில் குறிப்பிடுவது போன்று இறைவனுக்கு மிக நெருங்கிய மனிதர் சமூகத்திற்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியவர் என்பதாகும்” என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...