மக்களுக்கு உணவு தான் முக்கியம், அணு ஆயுதம் அல்ல.கட்சி கூட்டத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேச்சு!

Date:

2022 இல் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியம் என்றும், அணு ஆயுதங்கள் அல்ல என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோன்ங் உன் பேசியுள்ளார்.

தந்தையின் மரணத்திற்கு பிறகு அந் நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், கொரிய தொழிலாளர் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் பேசுகையில், அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.வடகொரிய பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில், ஐந்தாண்டு திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும், அவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கமாக இத்தகைய கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசும் கிம் ஜோன்ங் உன், வடகொரியாவில் பஞ்சம் நிலவுவதாக தகவல்கள் வெளியான நிலையில், முதல்முறையாக இவ்வாறு பேசியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...