News Just IN: இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி.பேர்டினண்டோ பதவி விலகல்!

Date:

இலங்கை மின்சார சபை தலைவர் எம்.எம்.சி.பேர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பேர்டினண்டோ பதவி விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தான் பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பல தடவைகள் மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சி பெர்டினாண்டோ, யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதையடுத்து, பெரும் சர்ச்சைக்குள்ளானார்.இதன் காரணமாக, இவரின் செயற்பாடு தொடர்பில் பொறியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...