கொழும்பு துறைமுக நகர நடை பாதை இன்று திறந்து வைக்கப்பட்டது!

Date:

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (09) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வின் போது குறித்த நடைபாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். 500 மீட்டர் தூரத்துக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர நடைபாதையை நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தினந்தோறும் பொதுமக்கள் பயன்படுத்த முடியும். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் உள்ள நுழைவாயிலினூடாக உட்பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...