நாட்டின் ஏற்றுமதி வருமானம் 23% அதிகரிப்பு!

Date:

கடந்த 2021 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி மூலம் இலங்கை 15.12 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.இது 2020 இல் ஈட்டிய 12.34 பில்லியன் அமெரிக்க டொலர்களை விட 23% அதிகமாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதன்முறையாக பொருள்கள் ஏற்றுமதியில் ஈட்டப்படும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எல்லையை தாண்டி 2021 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளது.

இது 2021 ஆம் ஆண்டின் ஏற்றுமதி இலக்கை விட அதிகமாகும் எனவும் 2020 உடன் ஒப்பிடுகையில் 24% வளர்ச்சியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மாதாந்திர வர்த்தக ஏற்றுமதி வருமானம் பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி ஊடாக 15.1 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி எதிர்ப்பார்க்கப்பட்ட இலக்கை அடைந்தமை குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு விசேடமாக நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...