இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு கொவிட் உறுதி!

Date:

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான தொடர் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.இத் தொடரில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷிகார் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மற்றும் உதவியாளர்களுக்கு கொவிட் தொற்று நேற்று (02) உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது,

ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று வீரர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், உதவியாளர்கள் சிலருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இரண்டு முதல் நான்கு பேர் வரை இருப்பார்கள்.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. வீரர்கள் மூவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் மூவரும் ஒருவார காலம் தனிமையிலிருந்து தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அணியுடன் இணைவார்கள்.

இதன் மூலம், தயார்நிலை வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ள ஷாருக்கான், சாய் கிஷோர் மற்றும் ரிஷி தவான் ஆகியோர் அணியில் சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக வெங்கடேஷ் ஐயர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...