ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!

Date:

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர், கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளையடுத்து முன்னாள் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த போதிலும் ஈஸ்டர் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

நாமல் பலாலே, ஆதித்ய படபெந்திகே மற்றும் மொஹமட் இர்ஷாதீன் ஆகியோர் அடங்கிய கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்ற விசாரணை மன்றத்தினால் முன்னாள் பொலிஸ் மா அதிபரை விடுவிப்பதற்கான தீர்ப்பை அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...