உக்ரைன்-ரஷ்யா போர் Updates; கப்பல் போக்குவரத்து நிறுத்தம்: தரைப்படையெடுப்பு ஆரம்பம்!

Date:

அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா பெலராஸ் எல்லைகளிலிருந்து ரஷ்யா தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா எல்லையை ஒட்டிய கார்கிவ் மாநிலத்திலுள்ள சுகுயேவ் விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப் பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.

வடக்கே பெலாரசில் இருந்தும் ,வடக்கிலும் கிழக்கிலும் ரஷ்யாவில் இருந்தும் என பல முனைகளிலும் ரஷ்யத் தரைப் படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதை அந் நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மோதலில் உக்ரைன் படையினர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு தெற்கே உள்ள அசோவ் கடல் வழியாக அந் நாட்டின் மரியுபோல் துறைமுகத்துக்குக் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்தி விட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...