‘எந்தவொரு பிரதேசத்திலும் மின்சார விநியோகம் தடைபடாது’: மின்சார சபை

Date:

நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று மின்சார விநியோகம் தடைபடாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான எரிபொருளை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்இணங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்தார்.

இருப்பினும், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

இதன்மூலம், தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக பல தரப்பினருடன் இலங்கை மின்சார சபை தீவிர கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மின்சாரம் தடைபடுவதை தடுக்கும் வகையில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது மக்கள் மன்ற செயலாளர் மேலும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ‘பீக் ஹவர்ஸில்” பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

திட்டமிடப்பட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவித்த வசந்த பெரேரா, எவ்வாறாயினும், பராமரிப்புப் பணிகள் மற்றும் திடீர் மின்தடைகள் காரணமாக மின்வெட்டு ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

Popular

More like this
Related

‘வெசாக் வாரத்தில் ஹஜ்ஜுப் பெருநாள்: உழ்ஹிய்யா கடமைகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு சமூக நீதிக் கட்சி கோரிக்கை.

அரசியல் இலாபங்களுக்காகவும் ஏனைய குறுகிய நோக்கங்களுக்காகவும் திட்டமிடப்பட்ட முறையில் மீண்டும் ஒரு...

மாணவர்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு: “EduCycle” கழிவு முகாமைத்துவத் திட்டம் பாடசாலைகளில் ஆரம்பம்!

இலங்கை பாடசாலை மாணவர்களிடையே நிலையான சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கில், “EduCycle”கழிவு...

அரச விடுமுறையில் மாற்றம்!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வு மே மாதம்...

A/L பரீட்சை விண்ணப்ப காலம் நள்ளிரவுடன் நிறைவு

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு...