டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் ஏரோ பிளேன் உணவகம்!

Date:

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் டெல்லி மீரட் அதிவிரைவு சாலையில் தனியார் நிறுவனமொன்று ஏர் இந்தியா விமானத்தை 100 இருக்கைகள் கொண்ட உணவகமாக மாற்ற உள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து விமான நிலைய ஆணையத்திடமிருந்து ஏலத்தில் எடுத்த ஏர் பஸ் ஏ-320 ரக விமானத்தை உணவகமாக மாற்ற திட்டமிட்டுள்ளன.

இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார் நிறுவனத்துக்கு டெல்லி – மீரட் அதிவிரைவு சாலையில் 5 ஹெக்டேர் நிலத்தை 15 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ஏரோ பிளேன் உணவகம் செயல்படத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த விமானம் அந்த பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, அதன் உள்ளே உணவகம் போல மாற்றி அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...